பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் - ஸ்பெயின் பிரதமர்

November 25, 2023

பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் நேரம் வந்துவிட்டது என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரொ சஞ்செஸ் கூறியுள்ளார். எகிப்தின் ரஃபா எல்லைப் பகுதியில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரொ சஞ்செஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரு ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்பெயின் பிரதமர் பாலஸ்தீனத்திற்கு சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியம் உடன்படாவிட்டால் ஸ்பெயின் தன்னிச்சையாக முடிவெடுக்கும் என்று கூறினார். இதனை தொடர்ந்து […]

பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் நேரம் வந்துவிட்டது என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரொ சஞ்செஸ் கூறியுள்ளார்.
எகிப்தின் ரஃபா எல்லைப் பகுதியில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரொ சஞ்செஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரு ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்பெயின் பிரதமர் பாலஸ்தீனத்திற்கு சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியம் உடன்படாவிட்டால் ஸ்பெயின் தன்னிச்சையாக முடிவெடுக்கும் என்று கூறினார். இதனை தொடர்ந்து பெல்ஜியத்தின் பிரதமர் பேசுகையில், வன்முறையை நிறுத்த வேண்டும். பணிய கைதிகளை விடுவிக்க வேண்டும். மனிதாபிமான உதவிகள் காசாவுக்கு சென்று சேர வேண்டும். மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும். அதற்கான நம்பிக்கை உள்ளது. கசாவை அழிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்க இயலாது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu