ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருகை புரிந்துள்ளனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், 2 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். இது அவரது முதல் இந்திய பயணம் ஆகும். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் வந்துள்ளார்.இந்த பயணத்தின் போது, அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் விதத்தில் பேசுவார். மேலும், குஜராத்தில் உள்ள புதிய சி-295 விமான ஆலை திறப்பு விழாவில், இருவரும் கலந்து கொண்டனர். மேலும் மோடி மற்றும் சான்செசின் சந்திப்பின்போது, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியா மற்றும் ஸ்பெயினின் இடையிலான வர்த்தகம் மற்றும் பண்பாட்டுக்கு புதிய பரிமாணம் கிடைக்கும்.