ஆடி பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை திருவண்ணாமலை,திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு 260 பேருந்துகளும், நாளை மறுநாள் 585 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 45 பேருந்துகள் என 90 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூர்,திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய […]

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை திருவண்ணாமலை,திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு 260 பேருந்துகளும், நாளை மறுநாள் 585 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 45 பேருந்துகள் என 90 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூர்,திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பேருந்துகளும், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 15 பேருந்துகளும் என 30 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி ஆடி மாத பௌர்ணமி காரணமாக திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் மொத்தம் 1245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu