கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு ஆகிய திருவிழாக்கள் நடைபெறும். இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு ஐயப்ப பக்தர்கள் சென்றுவர ஏதுவாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஆண்டு தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் நாளை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னை,திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் மற்றும் குளிர்சாதனம் இல்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்களுக்கு ஆன்லைன் மூலமாக www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக 30 நாட்கள் முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.