தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் வசதிகளுக்காக 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி லட்சக்கணக்கான பயணிகள் தனது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. அவர்கள் சிரமம் இன்றி பயணம் செய்வதற்காக ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி 9 முதல் 11 ஆம் தேதி வரையில் சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கக்கூடிய பஸ்களுடன் சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து மொத்தம் 16895 பஸ்கள் இயக்கப்படுகிறது.பண்டிகை முடிந்த பின்னர் ஊருக்கு திரும்பி வர 13-ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கும் பஸ்களுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 13292 இயக்கப்பட உள்ளன. மேலும் தீபாவளி முடிந்து ஊர் திரும்ப மட்டும் 6992 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.