பழனி மற்றும் திருவண்ணாமலைக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி தைப்பூசம் மற்றும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. 26 ஆம் தேதி குடியரசு தினம் மற்றும் 27,28 ஆகிய தேதிகள் வார விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் 28ஆம் தேதி வரை 5 நாட்கள் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன














