தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பொதுமக்களின் உடமை, ஆவணங்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் பொருள்கள், உடைமைகள், ஆவணங்கள் முழுவதும் சேதமானது. மேலும் சேதமான ஆவணங்களுக்கு மாற்று ஆவணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி தூத்துக்குடி வட்டத்தில் தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களிலும் மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் காலை 5 மணி நேரம் வரை சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.