இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு ஊக்கத்தொகை என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறுகையில், இந்த ஆண்டில் காவல் உதவி ஆய்வார்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கவும், இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரவு பணியில் ஈடுபடும் காவலருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருட்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்தவர்களை ஏற்கெனவே கைது செய்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.