இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே 16 முதல் 21 வரை நடக்கிறது.
கோடைக்காலம் தொடங்கியவுடன், நீலகிரி மாவட்டம் சுற்றுலாபயணிகளால் நிரம்பி வழியும். இவர்களை மகிழ்விக்க, ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி போன்ற பல கண்காட்சிகள் நடைபெறும்.
இந்த ஆண்டில் 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே 16 முதல் 21 வரை நடக்கிறது. கோத்தகிரியில் மே 3, 4ஆம் தேதிகளில் 13-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 9 முதல் 11 வரை வாசனை திரவிய கண்காட்சி நடைபெறுகிறது. மேலும், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10 முதல் 12 வரை 20-வது ரோஜா கண்காட்சி, குன்னூரில் மே 23 முதல் 25 வரை பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இவை சுற்றுலாபயணிகளுக்கு அரிய அனுபவமாக இருக்கும்!