நெல்லை தாம்பரம் இடையே வரும் ஜூலை 30-ம் தேதி முதல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
நெல்லை- தாம்பரம் இடையே வரும் ஜூலை 30-ம் தேதி முதல் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 06004) தொடங்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த ரயில் மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 6:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.