தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலம் செல்வர். இம்முறை வழக்கத்தை விட அதிகமாக முன்பதிவு டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் டிக்கெட்டில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 10, 17 மற்றும் 24ஆம் தேதிகளில் இந்த சிறப்பு ரயில் இயங்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7:10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம்,திருச்சி, திண்டுக்கல்,மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதே போல் நாகர்கோவில்-மங்களூர் இடையே 11 மற்றும் 18 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் மங்களூர் தாம்பரம் இடையே 12, 19 மற்றும் 26 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த மூன்று சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.