கந்த சஷ்டி விழா பயணிகளுக்காக தாம்பரம்-திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர்-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி விழா முன்னிட்டு, தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில், தாம்பரம்-திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர்-சென்னை சென்ட்ரல் இடையே இரண்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி தாம்பரத்தில் இருந்து 6-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளையும் கடந்து 7-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும். அதுபோல் திருச்செந்தூரில் இருந்து 7-ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களை கடந்து, 8-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.