தமிழகத்தில் குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

December 15, 2022

தமிழக மருத்துவத்துறையில் குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டாக்டர் எம்.குமரேசன், கே.நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.அப்போது பேசிய அவர், டாக்டர் எம்.குமரேசன் ஆதாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை மேற்கொண்டு அவர்களின் […]

தமிழக மருத்துவத்துறையில் குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை டாக்டர் எம்.குமரேசன், கே.நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.அப்போது பேசிய அவர், டாக்டர் எம்.குமரேசன் ஆதாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை மேற்கொண்டு அவர்களின் மனநிலையை மாற்றம் செய்து இருக்கிறார்.

இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இவரிடம் சிகிச்சை பெற்று நலம் பெற்று இருக்கிறார்கள். டாக்டர் குமரேசன் மூலம் பலர் பயிற்சி பெற வேண்டும். குரல் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த அரிய சிகிச்சை குறித்து தமிழகத்தின் மருத்துவ துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தி ஏராளமான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu