ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக அருண் காஷ்யப் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 12-ம் தேதி முதல் அவரது பதவி காலம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் நேரடியாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சேர்மன் அஜய் சிங் கீழ் பணி செய்வார் என கூறப்பட்டுள்ளது.
அருண் காஷ்யப், விமான போக்குவரத்து துறையில் 25 வருட அனுபவம் உள்ளவர் ஆவார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்தார். அதற்கு முன்னதாக, ஜெட் ஏர்வேஸ், ஓமன் ஏர், பிளைதுபாய் ஆகிய விமான நிறுவனங்களிலும் இவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது பணி நியமனத்திற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சேர்மன் அஜய் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.