ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கிட்டத்தட்ட 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதி திரட்டும் திட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரபல பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட், நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங், இன்று இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த 2 மாதங்களில், 250 மில்லியன் டாலர்கள் நிதி விமான நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக திரட்டப்படுகிறது. பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக நிதி திரட்டுகிறது. ஏற்கனவே, 150 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டிய நிறுவனம், கூடுதல் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. விரைவில் சிக்கல்களை சரி செய்து சேவைகளை உயர்த்த உள்ளதாக அஜய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.