ஸ்பைஸ் ஜெட் - 80 விமானிகளை சம்பளம் இல்லா விடுப்பில் செல்ல அறிவுறுத்தியுள்ளது

September 21, 2022

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தனது 80 விமானிகளை, 3 மாத காலத்திற்கு சம்பளம் இல்லா விடுப்பில் செல்ல அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, போயிங் மட்டும் பம்பார்டர் ரக விமானங்களை இயக்கும் விமானிகள் விடுப்பில் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர். செலவினங்களைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா […]

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தனது 80 விமானிகளை, 3 மாத காலத்திற்கு சம்பளம் இல்லா விடுப்பில் செல்ல அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, போயிங் மட்டும் பம்பார்டர் ரக விமானங்களை இயக்கும் விமானிகள் விடுப்பில் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர். செலவினங்களைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா பரவல் காரணமாக பல விமானச் சேவைகளை நாங்கள் நிறுத்திய போதும் கூட, எங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்யவில்லை. ஆனால், தற்போது, விமானங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமானிகளின் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு விமானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய ஸ்பைஸ் ஜெட் விமானி ஒருவர், “விமான நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்து நாங்கள் அறிவோம். ஆனால், நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. மேலும், மூன்று மாத காலத்திற்குப் பின்னர் நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்து உறுதியான தகவல் இல்லை. அதனால், விடுப்பில் அனுப்பப்படும் விமானிகள் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu