ஸ்பைஸ் ஜெட் நிர்வாக அதிகாரியாக அஜய் சிங் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு நிறுவனத்தின் பங்குதாரர்கள் தரப்பில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அறுதி பெரும்பான்மையுடன் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் பங்குதாரர்கள், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சரக்கு வர்த்தகத்தை ஸ்பைஸ் ஜெட் எக்ஸ்பிரஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் கொண்டு வரவும் அனுமதி வழங்கியுள்ளனர். கடந்த காலாண்டில் இழப்பை பதிவு செய்த இந்த நிறுவனம், தற்போது சற்று மீண்டு வந்துள்ளது. திங்கட்கிழமை, நிறுவனத்தின் பங்குகள் 7% உயர்ந்து வர்த்தகமாயின.
கடந்த 2004 ஆம் ஆண்டு, அஜய் சிங் நிறுவனத்தின் மேலதிகாரியாக முதல் முதலாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 2010 வரை பணியில் இருந்த அவர், 2015 மே மாதம் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.