ஸ்பைஸ் ஜெட் மூத்த அதிகாரிகள் இருவர் விலகல் - பங்குகள் 10% சரிவு

March 12, 2024

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி அருண் காஷ்யப் மற்றும் தலைமை வர்த்தக அதிகாரி ஷில்பா பாட்டியா ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகி உள்ளனர். இந்த செய்தி வெளியான பிறகு, பங்குச் சந்தையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 9.7% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 54.6 ரூபாய் ஆக இருந்தது. மூத்த அதிகாரிகள் 2 பேர் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளது […]

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி அருண் காஷ்யப் மற்றும் தலைமை வர்த்தக அதிகாரி ஷில்பா பாட்டியா ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகி உள்ளனர். இந்த செய்தி வெளியான பிறகு, பங்குச் சந்தையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 9.7% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 54.6 ரூபாய் ஆக இருந்தது.

மூத்த அதிகாரிகள் 2 பேர் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: “நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாக அதிகாரிகள் வெளியேறி உள்ளனர்.” ஏற்கனவே, கடந்த ஒரு மாத காலமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்து வந்தன. கிட்டத்தட்ட 13% அளவுக்கு வீழ்ச்சி பதிவானது. அதே சமயத்தில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு வருட உச்ச மதிப்பையும் எட்டியது. இந்த நிலையில் இன்றைய தினம் மிகப்பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu