கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் ஆகி உள்ளது. இந்த நிலையில், நிறுவனத்தின் பங்குகளை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்த செய்தி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்ற போதும், இதன் விளைவாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் ஒரு வருட உச்சத்தை எட்டி உள்ளன.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளதாக கூறியுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 69.2 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மிக உயர்வான பங்கு மதிப்பு ஆகும். விரைவில், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் பங்குகளை ஸ்பைஸ் ஜெட் வாங்குவது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.