திம்பம் மலைப்பாதை வனப்பகுதியில் இரண்டாவது நாளாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஒரு லட்சத்து நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு பத்து வனசரகங்கள் உள்ளன. இதில் யானை, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு தற்போது கடும் வறட்சி அடைந்துள்ளது. இதனால் மரம் செடி கொடிகள் காய்ந்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலமலை வனச்சரகதிற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பற்றியது. இதனால் மரம், செடி, கொடிகள் அனைத்தும் நாசமாகின. மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மலை உச்சியில் இருப்பதாலும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதுவரை 100 ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடிகள் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று இரண்டாவது நாளாக வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்