ஆதாரம் இல்லாத காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து ராஜபக்சேவை விடுவிப்பதாக இலங்கையில் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில் இலங்கை அரசும், அதன் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்து 1.78 கோடி ரொக்க பணத்தை மக்கள் கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து ராஜபக்சேவுக்கு எதிராக ஊழல் விசாரணை தொடங்கியது. அந்த விசாரணை நடத்த சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் கடந்த புதன் அன்று கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நாங்கள் நடத்திய விசாரணையில் ராஜபட்சே ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஊழல் குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.