இலங்கை கடற்படையினர், நடுக்கடலில் தத்தளித்த 102 ரோஹிங்கியா அகதிகளை மீட்டுள்ளனர்.
இதில் 25 குழந்தைகள், 30 பெண்கள் உள்பட, 102 பேரும் இலங்கை வடக்கு கடற்பகுதியில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி படகில் தத்தளித்த இந்த அகதிகள் குறித்து இலங்கை கடற்படைக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில், கடற்படையினர் மீண்டும் கரைக்கு அழைத்து வந்தனர். இலங்கை கடற்படையின் செய்திதொடர்பாளர் கயன் விக்ரமசூரியா, மீட்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறினார். அவர்களின் மொழி புரியவில்லை என்றாலும், அவர்கள் ரோஹிங்கியா அகதிகளே என்றும், மியான்மர் நாட்டைச் சார்ந்தவர்கள் என கடற்படை நம்புகின்றது. 2022-ஆம் ஆண்டில் இதே போல 100 ரோஹிங்கியா அகதிகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.