கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.
இலங்கையில் கடந்த 14-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரா குமார திசநாயகாவின் கட்சி வெற்றி பெற்றது. இதன் பின்னர், இலங்கையின் புதிய மந்திரிசபை இன்று பதவியேற்றது. அதிபர் திசநாயகாவின் முன்னிலையில், இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். அத்துடன், புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது. வெளிவிவகாரத் துறை மந்திரியாக விஜித ஹேரத், மகளிர் மற்றும் சிறுவர் நலத் துறை மந்திரியாக சரோஜா சாவித்திரி பால்ராஜ், கடற்தொழில் நீரியல் வழங்கல் மந்திரியாக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றனர். இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்கவுள்ளது.