இலங்கை மருந்து இறக்குமதிக்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.
இலங்கை மிகவும் மோசமான பொருளாதார சூழலில் உள்ளது. அந்த நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து தட்டுப்பாடு காரணமாகவும் காலாவதியான மருந்துகளாலும் மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு அதிக மரணங்கள் நிகழ்ந்தன.
இதனை அடுத்து இலங்கை சுகாதாரத்துறை அவசரகால மருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்தது. ஆனால் இதனால் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது. தரமற்ற மருந்துகளை சரியான சோதனை செய்யாமல் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவசர கால கொள்முதலை அரசாங்கம் நிறுத்தியது. அதோடு இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் மருந்து இறக்குமதிக்காக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனை சுகாதாரத்துறை மந்திரி கேக்கலிய ரம்புக்குவெல்ல தெரிவித்துள்ளார்.