உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியதில் இலங்கை அணி வெற்றி பெற்றது.உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி இடையே நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து பவிலியன் திரும்பினார்கள். இதனால் 33.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள் பதும் நிடங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா தனது நிதானமான ஆட்டாத்தால் 25.3 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.