இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக், இந்தியா வருகை தர உள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக், பெரும் வெற்றி பெற்று இலங்கை அதிபராக பதவியேற்றார். அதன் பிறகு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் கொடுத்த அழைப்பை ஏற்று, இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக், டிசம்பர் 15-ம் தேதி முதல் 2 நாள் இந்தியா பயணத்தை மேற்கொள்வதாக இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அறிவித்தார். இந்தியா வருகையின்போது, அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான மீனவர்கள் பிரச்சனை, வர்த்தக விவகாரங்கள் மற்றும் எதிர்கால கூட்டுறவு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முக்கியமான புத்த கயா தலத்துக்கும் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.