2 ஆண்டுகளுக்கு தேர்தல்களை ஒத்திவைக்க இலங்கை அதிபர் பரிந்துரை

May 29, 2024

இலங்கையில் நடைபெற உள்ள பொது தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் விக்கிரமசிங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 17ஆம் தேதிக்குள் இலங்கையில் அதிபர் மற்றும் பாராளுமன்ற பொது தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இலங்கை அதிபர் விக்ரமசிங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி பொது தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும், […]

இலங்கையில் நடைபெற உள்ள பொது தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் விக்கிரமசிங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 17ஆம் தேதிக்குள் இலங்கையில் அதிபர் மற்றும் பாராளுமன்ற பொது தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இலங்கை அதிபர் விக்ரமசிங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி பொது தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும், அதன் அலுவலக செயல்பாட்டையும் இரண்டு வருடத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு தேவையான பொருளாதார மறுசீரமைப்பை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதையடுத்து பொது தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் விக்கிரமசிங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பரிதா அரங்கே பண்டாரா கூறுகையில், பொருளாதார நெருக்கடியை சமாளித்து உறுதியான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார். அதிபர் அலுவலக செயல்பாட்டு காலம் எதற்காக இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான முழு விவரத்தையும் பண்டாரா விளக்கியுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் நன்கொடையாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அவற்றை வெற்றிகரமாக செய்து முடிக்க அதிபரின் பதவி காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu