இலங்கையின் நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சே தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி .வேப்பமனு தாக்கல் தொடங்க உள்ளது. தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக்காவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த வரிசையில் இலங்கையின் நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதனால் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் சுதந்திர கட்சியின் தலைவர் ஆவார்.