எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் விடுவிப்பு

October 9, 2024

எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் செப்டம்பர் மாத சம்பளம் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், போராட்டத்தை நிறுத்தி, ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய […]

எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் செப்டம்பர் மாத சம்பளம் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், போராட்டத்தை நிறுத்தி, ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய கல்வி அமைச்சரிடம் 2 முறை கோரிக்கை வைக்கப்பட்டும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரை வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாநில அரசு நிதி பகிர்வு குறித்து ஆலோசனைகள் நடத்துவதாகவும், அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu