ஜூலை 15 முதல் அக்டோபர் வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் மூலம் அரசு சேவைகள் எளிதாகக் கிடைக்கும்.
தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, மக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்க்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்றார். தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில், ஜூலை 15 முதல் அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. அரசு சேவைகள் பொதுமக்களுக்கு நேரில் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மக்கள் புகார்கள், விண்ணப்பங்கள், தேவைகள் உள்ளிட்டவை நேரில் பெற்றுக் கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்பு சமூக ஊடகங்களில், குறிப்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.