தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு, லாய்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், அந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஹபக் லாய்டு நிறுவனம், சரக்கு முனையங்கள் மற்றும் தளவாட வசதிகள் ஆகியவற்றை அமைப்பதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைக்க உள்ளது. இதற்காக, 2500 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இந்த நிறுவனத்தின் திட்டம் மூலம், 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு இந்த முதலீடு மிகவும் துணையாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.