இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகள் விரைவில் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவைகள் சார்ந்த பாதுகாப்பு விவகாரங்களுக்காக, உள்துறை அமைச்சகம் ஸ்டார்லிங்க் சேவைக்கு அனுமதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில், இதற்கான அனுமதியை தொலைத்தொடர்பு அமைச்சகம் விரைவில் வழங்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதியில் நடைபெறும் சந்திப்பின்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கருதப்படுகிறது. எனினும், உடனடியாக ஸ்டார்லிங்க் இணைய சேவை கட்டமைக்கப்பட முடியாது என்பதால், கூடிய விரைவில் ஸ்டார்லிங்க் சேவைகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், சுனில் மித்தலின் ஒன் வெப் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமம் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், எல்லாம் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.