சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படை

November 12, 2022

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபட மாநில பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் ஏற்படும் வெள்ள […]

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபட மாநில பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளின்போது மீட்புப் பணியில் ஈடுபட தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள், மீட்புத் தளவாடங்களுடன் காவல் துறை தலைமையகத்தில் தயார் நிலையில் உள்ளனர். மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் காவல் துறையினரை தயார் நிலையில் வைக்கும்படி, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu