கிரீஸ், ஐரோப்பாவின் தென்கிழக்கே உள்ள பால்கன் தீபகற்பத்தில் அமைந்த ஏஜியன் கடலில் அமைந்துள்ள அதன் பிரபலமான சுற்றுலாத் தலமான சாண்டோரினி தீவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது.
நிலநடுக்கத்திற்குப் பின்னர், சாண்டோரினியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணமாக 11,000 பேர் தீவிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். அவசரநிலை உத்தரவு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீடிக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.