ஜனவரி 22ஆம் தேதி அன்று பங்குச் சந்தைகள் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2:30 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இவ்விழாவிற்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வகையில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22ஆம் தேதி அன்று மத்திய அரசு அலுவலகங்கள் வங்கிகளுக்கு அரைநாள் விடுப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பங்குச் சந்தைகள் அனைத்தும் 9 மணிக்கு பதிலாக மதியம் 2.39 மணிக்கு திறக்கப்பட்ட மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரை நாள் திங்கள்கிழமை விடுப்பு வழங்கப்படுவதால் இன்று பங்கு சந்தைகள் காலை 9:15 முதல் 3.30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் 22 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.