பங்குச் சந்தையில் வீழ்ச்சி - சென்செக்ஸ் 383 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தை கடும் ஏற்ற இறக்கத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 383.69 புள்ளிகள் சரிந்து 73511.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 140.21 புள்ளிகள் சரிந்து 22302.5 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, […]

இந்திய பங்குச் சந்தை கடும் ஏற்ற இறக்கத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 383.69 புள்ளிகள் சரிந்து 73511.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 140.21 புள்ளிகள் சரிந்து 22302.5 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, நெஸ்லே, டி சி எஸ், ஐ டி சி, கோட்டக் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, இண்டஸ் இண்ட் வங்கி, ஹிந்தால்கோ, டாடா மோட்டார்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோல் இந்தியா, ரிலையன்ஸ், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu