மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 723.57 புள்ளிகள் சரிந்து, 71428.43 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 212.55 புள்ளிகள் சரிந்து, 21717.95 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், பிபிசிஎல், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, டி சி எஸ், ஹெச் சி எல் டெக், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால், ஐடிசி, பிரிட்டானியா, கோட்டக் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், நெஸ்லே, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.