வரலாற்று உச்சத்தை தொட்ட நிஃப்டி - பங்குச் சந்தையில் தொடரும் காளை ஆதிக்கம்

February 19, 2024

தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வருகிறது. அத்துடன், இன்றைய வர்த்தக நாளில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 281.52 புள்ளிகள் உயர்ந்து, 72708.16 ஆக பதிவாகியுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 81.55 புள்ளிகள் உயர்ந்து, 22122.25 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை […]

தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வருகிறது. அத்துடன், இன்றைய வர்த்தக நாளில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.

இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 281.52 புள்ளிகள் உயர்ந்து, 72708.16 ஆக பதிவாகியுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 81.55 புள்ளிகள் உயர்ந்து, 22122.25 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ், ஐடிசி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே சமயத்தில், கோல் இந்தியா, எல் அண்ட் டி, எஸ் பி ஐ லைப் விப்ரோ ஹெச்டிஎஃப்சி லைஃப், எல் டி ஐ மைண்ட் ட்ரீ ஹீரோ மோட்டோ கார் ஹச் டி எஃப் சி வங்கி டாட்டா ஸ்டீல் பிபிசிஎல் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu