ஏற்றத்தில் தொடங்கி சரிவில் நிறைவடைந்த பங்குச் சந்தை

June 10, 2024

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றதை தொடர்ந்து வரும் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் தொடங்கியது. ஆனால், அதன் பிறகு ஏற்ற இறக்கமாக பயணித்து வந்து, இறுதியில் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 203.28 புள்ளிகள் சரிந்து 76490.08 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 30.96 புள்ளிகள் சரிந்து 23259.2 புள்ளிகளில் […]

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றதை தொடர்ந்து வரும் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் தொடங்கியது. ஆனால், அதன் பிறகு ஏற்ற இறக்கமாக பயணித்து வந்து, இறுதியில் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 203.28 புள்ளிகள் சரிந்து 76490.08 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 30.96 புள்ளிகள் சரிந்து 23259.2 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், அல்ட்ராடெக் சிமெண்ட், கிராசிங் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், சிப்லா, பவர் கிரிட், நெஸ்லே, என்டிபிசி, டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, மஹிந்திரா, எல்டிஐ மைண்ட்ரி, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu