வடகொரியாவில் கானுன் புயலால் ஏற்பட்ட சேதத்தை தடுக்க தவறியதற்காக அதிகாரிகளை அதிபர் கிம் ஜாங் உன் கண்டித்தார்.
ஜப்பானை தாக்கிய வெப்பமண்டல புயல் கானுன், வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியாவை கடந்து பலத்த மழையை கொண்டு வந்தது. இதனால் கடும் சேதம் ஏற்பட்டது. வடகொரியாவில் பலவீனமான உள்கட்டமைப்பு காரணமாக இயற்கை பேரழிவுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. அதே போல் காடழிப்பால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
நாட்டின் கிழக்கில் உள்ள அன்பியன் கவுண்டியில் வெள்ளம் சூழ்ந்த விவசாய நிலங்களைப் பார்வையிட்ட கிம், உள்ளூர் அதிகாரிகளை கடுமையாக சாடினார். அவர்களுடைய பொறுப்பற்ற செயல்களேயே அப்பகுதி அதிக சேதத்தை சந்தித்ததாகக் கூறினார். மேலும் இத்தகைய அசாதாரண காலநிலையை சமாளிக்கவும், நாட்டின் பொருளாதார உற்பத்தி பாதிக்காமல் இருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் கிம் ஜாங் உன், உணவுப் பற்றாக்குறை மற்றும் விவசாயப் பிரச்சனைகளைத் தீர்க்க, உயர்மட்டக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.