புயல் எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள மீனவர்கள் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது .இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு ரெட் க்ரேட் விதிக்கப்பட்டுள்ளது .குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்து மீனவர்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.