அமெரிக்காவின் மத்திய பகுதியில் வீசிய புயலுக்கு குழந்தைகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ், ஆர்கன்சாஸ், ஹோக்லோமோ ஆகிய மாகாணங்களில் புயல் வீசியது. இதில் 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சம் பேர் இருட்டில் அவதியுற்றனர். சாலையில் இருந்த பல கார்கள் கவிழ்ந்தது. ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலர் கட்டிடஇடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது இந்த புயல் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.