பிரேசில் புயல் - 21 பேர் உயிரிழப்பு

September 6, 2023

பிரேசில் நாட்டில் பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் தென்மாநிலம் ரியோ கிராண்ட் டோ சுல். இங்கு புயல் காரணமாக கனமழை பெய்தது. இதில் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக 21 பேர் பலியாகினர். இதனால் சுமார் 1650 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இது குறித்து இம்மாநில கவர்னர் எட்வர்தோ லைட் கூறுகையில், பருவநிலை மாற்றம் காரணமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த புயலால் உயிர் பலி […]

பிரேசில் நாட்டில் பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் தென்மாநிலம் ரியோ கிராண்ட் டோ சுல். இங்கு புயல் காரணமாக கனமழை பெய்தது. இதில் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக 21 பேர் பலியாகினர். இதனால் சுமார் 1650 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இது குறித்து இம்மாநில கவர்னர் எட்வர்தோ லைட் கூறுகையில், பருவநிலை மாற்றம் காரணமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த புயலால் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது வெப்ப மண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.

ரியோ கிராண்ட் பகுதியில் ஆற்றோரம் வசித்து வந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உணவுக்கு போராடி வருகின்றனர். இதற்கு முன்பு ஜூன் மாதம் இதே போன்று சூறாவளி ஏற்பட்டது. அப்போது 16 பேர் உயிரிழந்தனர். 40 நகரங்கள் பாதிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu