நாளை வங்க கடலில் புயல் வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

November 16, 2023

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியிலே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை ஒடிசா கடற்கரை பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடக்கில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்தது.இதனை அடுத்து புயல் சின்னம் வலுவடைந்து வரும் காரணத்தினால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இது மேலும் தீவிரம் அடைந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக ஆந்திராவில் தென்கிழக்கு பகுதியில் […]

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியிலே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை ஒடிசா கடற்கரை பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடக்கில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்தது.இதனை அடுத்து புயல் சின்னம் வலுவடைந்து வரும் காரணத்தினால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இது மேலும் தீவிரம் அடைந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக ஆந்திராவில் தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இது மேலும் வடக்கு,வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை ஒடிசா கடற்கரை பகுதியை சென்றடைகிறது. பின்னர் இது கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசத்தை அடைகிறது. இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என்ற பெயர் இந்த புயலுக்கு சூட்டப்பட உள்ளது. பின்னர் வரும் 18 ஆம் தேதி வங்காளதேசத்தில் மோங்லா - கெபுபரா கடற்கரையை கடக்க உள்ளது. மேலும் இந்த நேரத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu