ரீமால் புயல் வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி சாகர் தீவுகளுக்கும், கேபுபாராவுக்கு இடையே நேற்று இரவு கரையை கடந்தது.
வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி சாகர் தீவுகளுக்கும், கேபுபாராவுக்கு இடையே நேற்று இரவு 10:30 மணி முதல் 12. 30 மணி வரை தீவிர புயலாக ரீமால் புயல் கரையை கடந்துள்ளது. இது மணிக்கு 110- 120 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்பொழுது 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டு சாலைகளில் மரங்கள் முறிந்துள்ளது. அதனை அடுத்து அங்கு சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது