செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களுக்கு புயல் எச்சரிக்கை, பேரிடர் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை ஒலிபெருக்கிகள் அனைத்தும் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா, என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்கு இருக்கும் 60க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவி பயன்பாட்டில் உள்ளதா, தொழில் நுட்ப கோளாறு எதும் உள்ளதா எனவும் அந்தந்த பகுதி தாசில்தார்கள் மீன்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.