மத்திய தொழிற்சங்ககள் அனைத்தும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவும் தனியார் மயமாக்களை கைவிட வேண்டும் எனவும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.
மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16ஆம் தேதி விவசாய தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தபால்,தொலை தொடர்பு துறை, ரயில்வே, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தொழிற்சங்கத்தினர் பங்கு பெற உள்ளனர். இந்த போராட்டம் நகரங்களை மட்டும் அன்று கிராமங்களிலும் நடைபெற உள்ளது. போராட்டத்தை நடத்த தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் இதற்கு ஆதரவை கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 16ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.