12 மணி நேர வேலை மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மே 12-ல் வேலைநிறுத்தம்

April 24, 2023

தமிழகத்தில் வரும் 26-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும், மே 12-ம் தேதி வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக அதிகரித்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தவில்லை. பல்வேறு நாடுகளில் […]

தமிழகத்தில் வரும் 26-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும், மே 12-ம் தேதி வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக அதிகரித்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தவில்லை. பல்வேறு நாடுகளில் 5 நாட்கள் வேலை, நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை என்று வேலை நேரத்தைக் குறைத்து வரும் நிலையில், முதல் முறையாக வேலை நேரத்தை அதிகரித்து மசோதா நிறைவேற்றியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

எனவே வரும் 26-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. வரும் 24-ம் தேதி தொழிற்சாலைகள் முன் வாயிற்கூட்டம், 27-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குதல், 28-ம் தேதி கருப்பு பட்டை அணிதல் மற்றும் மே 12-ம் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் நடத்துவது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu