சீனாவின் திபெத் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமயமலையின் வடக்கில் அமைந்துள்ள ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு காலை 9.05 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆரம்பகட்ட தகவலின்படி, 95 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி 126 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். மேலும், 188 பேர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு மீட்புக்குழுக்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை வழங்கின. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால், மீட்பு பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.