மாணவர்கள் கலைத் திறனை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் 

January 13, 2023

மாணவர்கள் கலைத் திறனை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை விழாவில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா-2022-23 போட்டிகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 13,210 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 28, 53,882 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில் மாநில அளவிலான இறுதிப் போட்டியில் 1,759 பேர் வெற்றி […]

மாணவர்கள் கலைத் திறனை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை விழாவில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா-2022-23 போட்டிகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 13,210 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 28, 53,882 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில் மாநில அளவிலான இறுதிப் போட்டியில் 1,759 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய முதல்வர், மாணவர்கள் படித்து முடித்து வேலைக்குச் சென்ற பின்னும் தங்களிடம் உள்ள கலைத் திறன்களை தொடர வேண்டும் என்றார். மேலும் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கற்றல், கற்பித்தல் கொண்டாட்டமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தரவரிசையின்படி முதல் 20 இடங்கள் பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு விரைவில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu